3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! |
திரைப்பட பாடலாசிரியரும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பிரமுகருமான சினேகன் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகையும் பா.ஜ.க பிரமுகருமான ஜெயலட்சுமி மீது போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் “நான் சினேகம் பவுண்டேசன் என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னுடைய அறக்கட்டளை மூலம் தமிழகம் முழுவதும் பல சேவை திட்டங்களை சிறப்பாக சட்டத்துக்கு உட்பட்டு, தற்போது வரை செய்து வருகிறேன். சமீபகாலமாக நடிகை ஜெயலட்சுமி, இணையத்தில் நான்தான் சினேகன் அறகட்டளை நிறுவனர் என்று கூறி என் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நிதி வசூலித்து வருகிறார். இந்த மோசடி குறித்து வருமான வரித்துறை என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். எனவே, பொது மக்களை ஏமாற்றி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகாரை தொடர்ந்து சினேகன் மீது கமிஷனர் அலுவலத்தில் ஜெயலட்சுமி புகார் செய்திருந்தார். அப்போது தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் ஆதாரங்களை வெளியிட்ட ஜெயலட்சுமி, சினேகன் பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இதற்கிடையே நடிகை ஜெயலட்சுமி மீது கொடுக்கப்பட்ட புகாரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினேகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சினேகன் புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க திருமங்கலம் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சினேகன் அறக்கட்டளை பெயரில் பொதுமக்களிடம் நிதி வசூலித்து மோசடி செய்ததாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த மோசடி தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க போலீஸ் முன் ஆஜராகுமாறு ஜெயலட்சுமிக்கு சம்மன் அனுப்பப்ட்டுள்ளது.