அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தின் முன்பு அவரது ரசிகர்கள் கூடுவார்கள். அப்போது ரஜினி வீட்டுக்குள் நின்றபடியே ரசிகர்களை பார்த்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார். அதுபோன்று நேற்றும் ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. அதோடு தனது பேரன்களான யாத்ரா, லிங்காவுடன் இணைந்து அவர் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். மேலும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி தனது இரண்டு மகன்கள் மற்றும் தந்தை ரஜினிகாந்த் உடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் தனது இரண்டு மகன்களின் கால்களில் மஞ்சள் சந்தனம் பூசி விடுகிறார். அதோடு தான் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![]() |