எனக்கு மரணமும் நிகழலாம் - பாலா உருக்கம் | அடம்பிடித்த சிறுமி : வீடியோ காலில் வந்து இன்ப அதிர்ச்சி தந்த விஜய் | நீச்சல் குளத்தில் போட்டோசூட் நடத்திய ஷிவானி | தங்கலான் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த விக்ரம் | மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்ட கீர்த்தி சுரேஷ் - சூரி | லியோ அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும்? | போனில் மட்டும் பேசு : பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த இயக்குநர் | எதிர்நீச்சல் தொடரில் 10 ஆண்டுகள் கூட நடிப்பேன் : மதுமிதா மகிழ்ச்சி | தீபிகா படுகோனின் ஜிம் மேட்டாக மாறிய ஐஸ்வர்யா மேனன் | 17 வருடங்களுக்கு பிறகு 2ம் பாகத்திற்காக இணைந்த சுரேஷ் கோபி - ஜெயராஜ் |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த வாரத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. அனைத்து மொழிகளிலும் படத்திற்குப் பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது இப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 165 கோடியும், வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலித்துள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேலும் படம் தியேட்டர்களில் தாராளமாக ஓடும் என்கிறார்கள். சுமார் 15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம் தியேட்டர்களில் ஓடி முடிவதற்குள் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பது கன்னடத் திரையுலகத்தின் தகவல்.
'காந்தாரா' படத்தின் வெற்றி மற்ற மொழி திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்குக் கதை, திரைக்கதை என்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரிஷப் ஷெட்டி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார்.