தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த வாரத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. அனைத்து மொழிகளிலும் படத்திற்குப் பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது இப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 165 கோடியும், வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலித்துள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேலும் படம் தியேட்டர்களில் தாராளமாக ஓடும் என்கிறார்கள். சுமார் 15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம் தியேட்டர்களில் ஓடி முடிவதற்குள் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பது கன்னடத் திரையுலகத்தின் தகவல்.
'காந்தாரா' படத்தின் வெற்றி மற்ற மொழி திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்குக் கதை, திரைக்கதை என்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரிஷப் ஷெட்டி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார்.