'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த மாதம் 30ம் தேதி வெளிவந்த கன்னடப் படம் 'காந்தாரா'. கர்நாடகாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்தது. கடந்த வாரத்தில் தமிழ், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. அனைத்து மொழிகளிலும் படத்திற்குப் பாராட்டுக்களும் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
தற்போது இப்படத்தின் மொத்த உலக வசூல் 180 கோடியைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 165 கோடியும், வெளிநாடுகளில் 15 கோடியும் வசூலித்துள்ளதாம். இன்னும் ஒரு வாரத்திற்கு மேலும் படம் தியேட்டர்களில் தாராளமாக ஓடும் என்கிறார்கள். சுமார் 15 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஒரு படம் தியேட்டர்களில் ஓடி முடிவதற்குள் 200 கோடி வசூலைக் கடந்துவிடும் என்பது கன்னடத் திரையுலகத்தின் தகவல்.
'காந்தாரா' படத்தின் வெற்றி மற்ற மொழி திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒரு படத்திற்குக் கதை, திரைக்கதை என்பதுதான் மிகவும் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது. கன்னட சினிமா ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த ரிஷப் ஷெட்டி, தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார்.