ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சென்னை : 'நடிகை நயன்தாரா இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான விவகாரத்தில், நான்கு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணமாகி, நான்கு மாதங்கள் ஆகின்றன. இந்த நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக, விக்னேஷ் சிவன் தகவல் வெளியிட்டார். வாடகை தாய் சட்டப்படி, திருமணமாகி ஐந்து ஆண்டுகள் வரை குழந்தை பேறு இல்லாதவர்கள் மற்றும் தம்பதியில் ஒருவருக்கு, குழந்தைபேறுக்கு தகுதி இல்லாத பட்சத்தில், உரிய விதிகளை பின்பற்றி வாடகை தாய் வாயிலாக குழந்தை பெறலாம்.
ஆனால், நயன்தாரா விவகாரத்தில், திருமணமான நான்கு மாதங்களிலேயே வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றது, பல்வேறு சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்ககத்தின் சார்பில், மூவர் குழு விசாரணை நடத்தி வருகிறது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும், 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்தாண்டு டிச., மாதமே வாடகை தாயை பதிவு செய்து குழந்தை பெற்றதாகவும், விசாரணையில் தகவல் வெளியானது. இந்த தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து, இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. நாங்களும் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை. அவர்கள், எந்த மருத்துவமனை வாயிலாக, வாடகை தாய் நியமித்து, குழந்தை பெற்றனர் என, விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணி முடிந்த பின் தான், அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் நான்கு நாட்களில் அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.