ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை அந்த செய்தியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் தகவல் உண்மைதான். இதில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதியும் , விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானபோதும் இரண்டு படங்களுக்குமே சமமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மோதிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாரிசு, துணிவு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.