ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கடலூரில் நடத்தி வருகிறார் நெல்சன். இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு அருகே உள்ள அழகிய நத்தம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி அங்கு சென்றார். செல்லும் வழியில் புதுச்சேரி ரசிகர்கள் அங்கு ரஜினிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை இறக்கி வைத்துக் கொண்டு ரசிகர்களை பார்த்து கையெடுத்து வணங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தபடி அங்கே என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்து புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.