ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பை கடலூரில் நடத்தி வருகிறார் நெல்சன். இந்த ஜெயிலர் படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு அருகே உள்ள அழகிய நத்தம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்று பாலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினி அங்கு சென்றார். செல்லும் வழியில் புதுச்சேரி ரசிகர்கள் அங்கு ரஜினிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதையடுத்து தனது காரின் கண்ணாடியை இறக்கி வைத்துக் கொண்டு ரசிகர்களை பார்த்து கையெடுத்து வணங்கி தனது மகிழ்ச்சியை தெரிவித்தபடி அங்கே என்ட்ரி கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்து புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது.