ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
நடிகர் பஹத் பாசில் கடந்த ஆண்டில் தெலுங்கில் புஷ்பா, இந்தாண்டு தமிழில் வெளியான விக்ரம் என இரண்டு படங்களிலும் வித்தியாசமான நடிப்பை தந்து தென்னிந்திய மொழி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நடிகராக மாறிவிட்டார். இந்தநிலையில் அவர் கன்னடத்திலும் முதன்முதலாக கால் பதிக்கிறார். கன்னட இயக்குனர் பவன்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார்.
கடந்த 2016ல் மலையாளத்தில் வெளியாகி பஹத் பாசிலுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானவர் தான் அபர்ணா பாலமுரளி. அந்த வகையில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் கழித்து தற்போது இவர்கள் மீண்டும் கன்னடப் படத்துக்காக இணைய உள்ளனர். கன்னடத்தில் மட்டுமல்லாது மலையாளம், தமிழ் என மூன்று மொழிகளில் இந்தப்படம் தயாராக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 9ம் தேதி துவங்க இருக்கிறது.