இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

எதிர்நீச்சல் தொடர் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக போட்டோகிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி சொல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், 'படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இது போன்று இப்போதும் நடக்கிறதா?' என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள திருசெல்வம், 'இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். கிராமப்புறங்களில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறேன். இது என் வீட்டிலும் நான் பார்த்த பலர் வீட்டிலும் பெண்களுக்கு நடந்து இருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைப்பது என் நோக்கம் அல்ல. அப்படி அவர்களை நிர்பந்தித்து அடைத்து வைக்கும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
'எதிர்நீச்சல்' தொடர் ஒளிபரப்பான முதல் நாள் முதல் இப்போது வரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கதாநாயகியின் தைரியமான எழுச்சியுடன் விறுவிறுப்பான அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.




