ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' |

எதிர்நீச்சல் தொடர் அவ்வப்போது சில சர்ச்சைகள் எழுந்து வருகிறது. முன்னதாக போட்டோகிராபர்களை இழிவுப்படுத்தியதாகவும், நடைமுறையில் இல்லாததை மிகைப்படுத்தி சொல்வதாகவும் குற்றசாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து ஏற்கனவே சீரியல் குழுவினர் விளக்கமளித்திருந்தனர்.
இந்நிலையில், அண்மையில் சிலர் இயக்குநர் திருசெல்வத்திடம் எதிர்நீச்சல் சீரியல் குறித்து சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். அதில், 'படித்த பெண்களை ஏன் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்க பார்க்கிறீர்கள்? இது போன்று இப்போதும் நடக்கிறதா?' என சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள திருசெல்வம், 'இதுபோன்ற சம்பவங்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. நகர்ப்புறங்களில் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். கிராமப்புறங்களில் படித்த பெண்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து நான் இப்படி ஒரு கதையை எடுத்து இருக்கிறேன். இது என் வீட்டிலும் நான் பார்த்த பலர் வீட்டிலும் பெண்களுக்கு நடந்து இருக்கிறது. பெண்களை வீட்டிற்குள் அடைத்து வைப்பது என் நோக்கம் அல்ல. அப்படி அவர்களை நிர்பந்தித்து அடைத்து வைக்கும் போது அவர்கள் எடுக்கும் முடிவு பற்றி தான் இந்த சீரியலின் கருத்து இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
'எதிர்நீச்சல்' தொடர் ஒளிபரப்பான முதல் நாள் முதல் இப்போது வரை சீரியல் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது கதாநாயகியின் தைரியமான எழுச்சியுடன் விறுவிறுப்பான அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.




