மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றாலும் தியேட்டர்களில் பெரிய வசூலை பெறவில்லை. என்றாலும் ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான சசிகுமார் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்திருக்கிறார்.
ஆதார் படத்திற்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் மற்றும் படத்தினை வெளியிட்ட சக்திவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தயாரிப்பாளரின் மனைவி ராம்நாத் பழனிகுமாரிடம் காரை வழங்கினார்.