போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

'பூவே உனக்காக' தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ராதிகா ப்ரீத்தி. இதன் மூலம் தமிழில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இந்த தொடரின் பாதியிலேயே ராதிகா ப்ரீத்தி திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் மீண்டும் அதே டிவியிலேயே அக்கா தங்கை செண்டிமெண்டை மையமாக கொண்ட புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியிருந்தார். இதில், அக்கா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை நிவிஷாவும், தங்கையாக ராதிகா ப்ரீத்தியும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். சில தினங்களுக்கு முன் இந்த சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஆனால், தற்போது அந்த தொடரிலிருந்து ராதிக ப்ரீத்தி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சின்னத்திரை வட்டாரங்களில் சில செய்திகள் கசிந்துள்ளது. அதன்படி, முதலில் சீரியலின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி தான் என சொல்லி அவரை கமிட் செய்துள்ளனர். ஆனால், சூட்டிங்கின் போது நிவிஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும், இந்த சீரியலுக்கு ஹீரோவை கமிட் செய்யாமலேயே சூட்டிங்கிற்கும் சென்றுள்ளனர். ஹீரோ கிடைக்காததால் தொடங்கிய ஒருவாரத்திலேயே சூட்டிங்கும் நின்றுவிட்டது
சீரியலை விட்டு விலகியதை உறுதிப்படுத்திய ராதிகா ப்ரீத்தியும், 'பூஜை போட்டு நான்கு மாதங்கள் ஆகியும் சீரியல் சூட்டிங் தொடங்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் தான் சூட்டிங் போனேன். எனக்கு சினிமா மற்றும் வெப்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, டிவி தொடரை விட்டு விலகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.