‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
'பூவே உனக்காக' தொடரில் பூவரசி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ராதிகா ப்ரீத்தி. இதன் மூலம் தமிழில் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இந்த தொடரின் பாதியிலேயே ராதிகா ப்ரீத்தி திடீரென சீரியலை விட்டு வெளியேறினார். இந்நிலையில், அவர் மீண்டும் அதே டிவியிலேயே அக்கா தங்கை செண்டிமெண்டை மையமாக கொண்ட புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியிருந்தார். இதில், அக்கா கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை நிவிஷாவும், தங்கையாக ராதிகா ப்ரீத்தியும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். சில தினங்களுக்கு முன் இந்த சீரியலின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
ஆனால், தற்போது அந்த தொடரிலிருந்து ராதிக ப்ரீத்தி விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சின்னத்திரை வட்டாரங்களில் சில செய்திகள் கசிந்துள்ளது. அதன்படி, முதலில் சீரியலின் கதாநாயகி ராதிகா ப்ரீத்தி தான் என சொல்லி அவரை கமிட் செய்துள்ளனர். ஆனால், சூட்டிங்கின் போது நிவிஷாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தின் காரணமாக ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகிவிட்டார். மேலும், இந்த சீரியலுக்கு ஹீரோவை கமிட் செய்யாமலேயே சூட்டிங்கிற்கும் சென்றுள்ளனர். ஹீரோ கிடைக்காததால் தொடங்கிய ஒருவாரத்திலேயே சூட்டிங்கும் நின்றுவிட்டது
சீரியலை விட்டு விலகியதை உறுதிப்படுத்திய ராதிகா ப்ரீத்தியும், 'பூஜை போட்டு நான்கு மாதங்கள் ஆகியும் சீரியல் சூட்டிங் தொடங்கவில்லை. இரண்டு நாட்கள் மட்டும் தான் சூட்டிங் போனேன். எனக்கு சினிமா மற்றும் வெப்தொடர்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, டிவி தொடரை விட்டு விலகிவிட்டேன்' என்று கூறியுள்ளார்.