'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் | நடிகை கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வதந்தி | ஜப்பானில் 100 நாட்கள் சாதனை படைத்த 'ஆர்ஆர்ஆர்' | சுதந்திர போராளி கதாபாத்திரத்தில் புகழ் | திலீப் படத்தில் இணைந்த ஜீவா |
தமிழில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் த்ரிஷா எப்போதுமே ஐஸ்வர்யா ராய் பற்றி சிலாகித்தே பேசி வருகிறார்.
அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுநாள்வரை இவர்கள் ஒன்றாக பணியாற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நந்தினியும் குந்தவையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் சோழர்காலத்தின் செல்பி ராணிகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்