காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தமிழில் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக திரைப்படமாக உருவாகி உள்ளது. இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரங்களான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும், குந்தவை கதாபாத்திரத்தில் திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் த்ரிஷா எப்போதுமே ஐஸ்வர்யா ராய் பற்றி சிலாகித்தே பேசி வருகிறார்.
அதேசமயம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து இதுநாள்வரை இவர்கள் ஒன்றாக பணியாற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நந்தினியும் குந்தவையும் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் சிலர் சோழர்காலத்தின் செல்பி ராணிகள் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்