திருச்சி கிழக்கு வேட்பாளரா? ராஜ்யசபா எம்.பி.,யா?: நடிகர் சஞ்சீவ் பதில் | திரிஷ்யம் 3 : மோகன்லால் நெகிழ்ச்சி | ‛கேஜிஎப்-3, சலார்-2' எப்போது? -பிரசாந்த் நீல் வெளியிட்ட தகவல் | தயாரிப்பாளராகும் இயக்குனர் மாரி செல்வராஜ்! | ஜூன் 12ல் நெட்பிளிக்ஸ் வெளியாகும் சூர்யாவின் கருப்பு! | 'ராகதேவன்' உடன் ஒரு ஆனந்தமான, ஆன்மிக பயணம் : கார்த்திக் சுப்பராஜ் | ஹாலிவுட் ஹீ-மேனுக்கு குரல் கொடுக்கும் உன்னி முகுந்தன் | ஆரம்பித்தபோதே நின்றுபோன ராம்சரணின் கனவுப்படம் ; அதற்கு உயிர் கொடுத்த ‛பெத்தி' இயக்குனர் | கேரளா : முதல் நாள் வசூலில் இரண்டாம் இடம் பிடித்த 'த்ரிஷ்யம் 3' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'கருப்பு' |

வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள், சீரியல்கள், வெப் சீரியஸ்கள் என பிசியாக நடித்து ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார். 'வந்தால் மஹாலெட்சுமி' என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்கிற வெப்தொடரில் அஞ்சலி ராவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. 'சூது கவ்வும்', 'அச்சம் என்பது மடமையடா', 'போத்தனூர் தபால்நிலையம்' ஆகிய படங்களும், 'மஹாலெட்சுமி', 'லெட்சுமி ஸ்டோர்ஸ்', 'தலையணைப் பூக்கள்' ஆகிய தொடர்களும் அஞ்சலி ராவ் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை. தற்போது அவர் கலர்ஸ் தமிழின் 'பச்சக்கிளி' தொடரின் மூலம் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் முத்துவுக்கு ஜோடியாக வக்கீல் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி ராவ் நடிக்க ஆரம்பித்துள்ளார். வக்கீல் ரம்யாவின் வாத திறமையை திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.




