பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

வெள்ளித்திரையில் நடிகையாக அறிமுகமான அஞ்சலி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படங்கள், சீரியல்கள், வெப் சீரியஸ்கள் என பிசியாக நடித்து ஆல் ரவுண்டராக கலக்கி வருகிறார். 'வந்தால் மஹாலெட்சுமி' என்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான 'ஆனந்தம் விளையாடும் வீடு' என்கிற வெப்தொடரில் அஞ்சலி ராவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது. 'சூது கவ்வும்', 'அச்சம் என்பது மடமையடா', 'போத்தனூர் தபால்நிலையம்' ஆகிய படங்களும், 'மஹாலெட்சுமி', 'லெட்சுமி ஸ்டோர்ஸ்', 'தலையணைப் பூக்கள்' ஆகிய தொடர்களும் அஞ்சலி ராவ் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை. தற்போது அவர் கலர்ஸ் தமிழின் 'பச்சக்கிளி' தொடரின் மூலம் சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த தொடரில் நாயகன் ஸ்டாலின் முத்துவுக்கு ஜோடியாக வக்கீல் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அஞ்சலி ராவ் நடிக்க ஆரம்பித்துள்ளார். வக்கீல் ரம்யாவின் வாத திறமையை திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.