தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‛‛சாதி, மதம், பேதம் பார்க்காமல் தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சரியாக இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா. ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி அல்ல'' என்றார்.