ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவில் 35 ஆண்டுகளுக்கு மேலாக காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர் மயில்சாமி. சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், ‛‛சாதி, மதம், பேதம் பார்க்காமல் தர்மம் செய்ய வேண்டும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே சரியாக இருக்கும். இந்து, முஸ்லீம், கிறிஸ்து என மதங்களை பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது. மூன்று பேரும் சேர்ந்து இருப்பது தான் இந்தியா. ஓட்டுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள். திருப்பி பதிலடி கொடுப்பார்கள். எந்த உலகத்திற்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம், மொழி அல்ல'' என்றார்.