ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'லைகர்' படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. மற்ற மொழிகளில் அப்படியிருந்தாலும் தெலுங்கில் மட்டுமாவது தப்பிக்காதா என எதிர்பார்த்தார்கள். விஜய் தேவரகொண்டாவின் முந்தைய சில மோசமான படங்களை விடவும் இந்தப் படம் மோசமாக வசூலித்தது. சீக்கிரமே தியேட்டர்களை விட்டும் தூக்கப்பட்டது.
படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத் தொகையைக் கேட்டு வருகிறார்களாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சார்மி கவுர் தர மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தை சந்தித்து தங்கள் பிரச்சினையை வினியோகஸ்தர்கள் பேச உள்ளார்களாம். அதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் தெலுங்கு சேம்பரில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.