ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'லைகர்' படம் எதிர்பாராத விதமாக படுதோல்வியைத் தழுவியது. மற்ற மொழிகளில் அப்படியிருந்தாலும் தெலுங்கில் மட்டுமாவது தப்பிக்காதா என எதிர்பார்த்தார்கள். விஜய் தேவரகொண்டாவின் முந்தைய சில மோசமான படங்களை விடவும் இந்தப் படம் மோசமாக வசூலித்தது. சீக்கிரமே தியேட்டர்களை விட்டும் தூக்கப்பட்டது.
படத்தை வாங்கிய தெலுங்கு வினியோகஸ்தர்கள் நஷ்டத் தொகையைக் கேட்டு வருகிறார்களாம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக சார்மி கவுர் தர மறுப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்னாத்தை சந்தித்து தங்கள் பிரச்சினையை வினியோகஸ்தர்கள் பேச உள்ளார்களாம். அதிலும் சுமூக முடிவு எட்டப்படவில்லை என்றால் தெலுங்கு சேம்பரில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.