பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தயாரிப்பாளர் ரவீந்திரனும், சீரியல் நடிகை மகாலட்சுமியும் சமீபத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்கள். இது குறித்த தகவல்கள் வெளியான போது அவர்கள் இருவரின் வயது வித்தியாசம் குறித்தும், இது நிஜமான திருமணமா இல்லை ஏதாவது சீரியல் விளம்பரத்திற்காக இப்படி ஒரு புகைப்படங்கள் வெளியாகி உள்ளதா? என்றும் சோசியல் மீடியாவில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வந்தன.
இப்படியான நிலையில் தற்போது ரவீந்திரன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், தங்களது திருமணம் குறித்த தகவலை வெளியிட்டபோது பாசிட்டிவ்- நெகட்டிவ் என இரண்டு விதமான விமர்சனம் வெளியானபோதும் அனைவருக்கும் எனது நன்றி என தெரிவித்துள்ள தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை வனிதா விஜயகுமாருக்கும் ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதாவது, பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்ட போது பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக வனிதா விஜயகுமாரை அப்போது விமர்சனம் செய்தவர்களில் தயாரிப்பாளர் ரவீந்திரனும் ஒருவர். அதன் காரணமாகவே இப்போது அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருப்பதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டிருந்தார் வனிதா விஜயகுமார். அந்த பதிவில், கர்மா யாரையும் விடுவதில்லை. அதுதான் தற்போது ரவீந்திரனை நோக்கி திரும்பி வந்திருக்கிறது என்று அவர் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், அதற்கு ரவிந்திரன் ஒரு பதில் கொடுத்துள்ளார். அதில் ‛வனிதா பதிவை படித்தேன். அதில் குருமா இஸ் மை... என ஏதோ எழுதி இருந்தார். அது என் வாயில் கூட நுழையவில்லை. அதைப்பற்றி இப்போது பேசுவதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கவில்லை. அதனால் எதைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.