Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமலா பால் புகார் கொடுத்த பவீந்தர் சிங்கிற்கு ஜாமின் : இருவரும் கணவன், மனைவி என கோர்ட்டில் தகவல்

07 செப், 2022 - 11:38 IST
எழுத்தின் அளவு:
Bhavninder-singh-got-bail

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்தார். பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு அவர் பஞ்சாபி பாடகர் பவீந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதற்கான படங்களும் வெளியானது, இதனை அமலாபால் மறுத்தார்.

இந்த நிலையில் திடீரென அமலாபால் பவீந்தர் சிங் மீது கடந்த வாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனு கொடுத்திருந்தார். அதில் தன்னிடம், பவீந்தர்சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் பெற்றிருந்தனர். அதை கேட்டபோது நானும் பவீந்தர் சிங்கும் இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று மிரட்டுவதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பவீந்தர்சிங், அவரது தந்தை சுந்தர்சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குபதிந்து பவீந்தர்சிங்கை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி வானூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பவீந்தர் சிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமலா பாலும், பவீந்தர் சிங்கும் கணவன் மனைவி என்றும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்தனர் என்றும் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்கள்.

அதோடு விழுப்புரம் ஆரோவில் அருகே பெரியமுதலியார்சாவடி பகுதியில் நடிகை அமலா பால் மற்றும் பவீந்தர்சிங் ஆகிய இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு சில மாதங்கள் தங்கி குடும்பம் நடத்தினார்கள். அப்போது இருவருக்குள் சொத்து பரிவர்த்தனை நடந்தது. மேலும் சில தொழில்களிலும் முதலீடு செய்துள்ளனர். பிறகு பவீந்தர்சிங்கிடமிருந்து அமலாபால் சில மாதங்களுக்கு முன்பு விலகி சென்றுவிட்டார். இப்போது திடீரென பொய் புகார் கொடுத்துள்ளார். எனவே பவீந்தர் சிங்கை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் பவீந்தர்சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஒரே நாளில் நாகார்ஜுனா, அமலா படங்கள் ரிலீஸ்ஒரே நாளில் நாகார்ஜுனா, அமலா படங்கள் ... பொன்னியின் செல்வன் பற்றிய நெகட்டிவ் கமெண்டுகளை வரவேற்கிறேன் : ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் பற்றிய நெகட்டிவ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
09 செப், 2022 - 18:28 Report Abuse
Natchimuthu Chithiraisamy அணைத்து நாட்களையும் வீட்டில் அணைத்து இடத்தையும் ரகசிய கேமராவில் பதிவு செய்ய வில்லை எனில் சிறையில் தான். ரகசிய திருமணம் செய்பவர்கள் எச்சரிக்கை
Rate this:
P.K. GANESAN - chennai ,இந்தியா
07 செப், 2022 - 13:05 Report Abuse
P.K. GANESAN இதெயெல்லாம் ஒரு பிழைப்பா?
Rate this:
P.K. GANESAN - chennai ,இந்தியா
07 செப், 2022 - 13:04 Report Abuse
P.K. GANESAN இவள் செய்வது முழுக்க முழுக்க விபச்சாரம் தான். இதற்கு இவள் கூச வேண்டும். இதெல்லாம் ஒரு பிழைப்பா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in