மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தெலுங்கில் தற்போது வம்சி இயக்கி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் தொடங்கி இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று விஜய் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அப்போது விஜய் விமானத்துக்குள் சென்றபோது தான் நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு சென்ற வரலட்சுமி அவரது பக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கிறார். எதிர்பாராதவிதமாக விஜய்யை பார்த்ததும் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்த வரலட்சுமி, அவர் இருக்கையில் அமர்ந்ததும் அவருடன் எடுத்துக் கொண்ட செல்பிகளை பதிவிட்டுள்ளார். அதோடு விஜய்யுடன் சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு பயணம் செய்தது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றும் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் வரலட்சுமி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.