ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசையமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு புதாபெஸ்ட் என்ற நகருக்கு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். அதேபோல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கனடா நாட்டில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருந்தார். இந்த நிலையில் அவர்கள் இருவரும் நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பி உள்ளனர். அப்போது இருவரும் ஒரே நேரத்தில் சென்னை விமான நிலையத்தை வந்து அடைந்திருக்கிறார்கள். அப்போது இளையராஜாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோவை பகிர்ந்து, ‛‛நாங்கள் இருவரும் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் சேருமிடம் தமிழ்நாடு தான்'' என்று பதிவிட்டுள்ளார் ரஹ்மான்.