விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் 2014ம் ஆண்டு நடிகர் கார்த்தி, சமந்தாவை நடிப்பில் 'எண்ணி ஏழு நாள்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டு பிவிபி கேபிட்டல் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் பெற்றிருந்தது. ஆனால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் திட்டமிட்டபடி படத்தை தொடங்கவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை.
இதனால் பிவிபி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது லிங்குசாமி கொடுத்த காசோலைகள் பணம் இன்றி திரும்பி வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், இயக்குநர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஸ் சந்திரபோஸ் ஆகியோருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்தோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை தொடர்ந்து நேற்று லிங்குசாமி கோர்ட்டில் அபராத தொகையை செலுத்தினார். 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்.