அதிமுகவுக்கு தலைமை ஏற்க நினைத்தேனா? இயக்குனர் கே .பாக்யராஜ் விளக்கம் | பாடலாசிரியர் சினேகன் தந்தை 102 வயதில் காலமானார் | ‛ஆண்பாவம் பொல்லாதது' பெண்களுக்கு எதிரான படமல்ல: ரியோ ராஜ் | இரண்டரை மணிநேர மேக்கப் ; ஜி.டி.நாயுடுவாக மாதவன் லுக் வெளியீடு | சஞ்சய் லீலா பன்சாலியுடன் சந்திப்பு ; ஹிந்தியில் நுழைகிறாரா சிவகார்த்திகேயன்? | பாகுபலியால் ஒரு நாள் தள்ளிப்போகும் ரவிதேஜாவின் 'மாஸ் ஜாதரா' ரிலீஸ் | இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! |

கன்னட சின்னத்திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அனிருத் ஜட்கர். தற்போது ஆரூர் ஜெகதீஷ் இயக்கத்தில் ஜோதே ஜோதேயாலி என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடர் ஆரம்பதித்த நாளில் இருந்தே அனிருத்துக்கும், இயக்குனருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். சமீபத்தில் அனிருத் இயக்குனருடன் கோபித்துக் கொண்டு படப்பிடிப்பில் இருந்து வெளியேறி விட்டார். இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
அனிருத் தனக்கு கேரவன் கேட்டு அடம்பிடித்தாக கூறப்படுகிறது. கன்னட சின்னத்திரையில் வெளிப்புற படப்பிடிப்பில் நடிகைகள் உடை மாற்றுவதற்கு மட்டுமே கேரவன் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனிருத் கேரவன் கேட்டது பிரச்சினை ஆனது. இந்த விவகாரம் கன்னட சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் அனிருத்துக்கு 2 ஆண்டுகள் தொடரில் நடிக்க தடை விதித்தது. இதனால் தற்போது நடித்து வரும் அனைத்து தொடர்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். கன்னட சின்னத்திரையில் ஒரு நடிகருக்கு தடை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை என்கிறார்கள்.