அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சோழா சோழா' என்ற பாடலின் வெளியீட்டு விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, நாசர், பிரகாஷ்ராஜ், தணிகலபரணி, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு, நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மணிரத்னம், தெலுங்குத் திரையுலகின் சீனியர் நடிகரான சிரஞ்சீவிக்கு நன்றி என்று பேசினார். மேலும் அது பற்றி பேசவில்லை. அதனால், நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் சிரஞ்சீவி எந்த விதத்தில் தொடர்பாகி உள்ளார் என்று யோசித்தனர். படத்தில் அறிமுகக் காட்சியில் பின்னணிக் குரல் மூலம் கதையை ஆரம்பிக்கிறார்களாம். அதற்காக தமிழில் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி குரல் கொடுத்துள்ளார். எனவேதான் மணிரத்னம், சிரஞ்சீவிக்கு நன்றி சொன்னதாகத் தெரிகிறது.
மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இது போன்று சீனியர் நடிகர்களைத்தான் பேச வைத்துள்ளார்களாம். விரைவில் அது பற்றிய தகவல் வெளியாகலாம்.