தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
பாலிவுட் நடிகர் அமீர்கான் தயாரித்து நடித்து கடந்த 11ம் தேதி திரைக்கு வந்த படம் லால் சிங் தத்தா . இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாதால் பலத்த அதிர்ச்சி அடைந்திருக்கிறார் அமீர்கான். இந்தநிலையில், இப்படத்தை திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் வெளியிட்டு வந்துள்ளார்கள். இதுகுறித்து வயாகாம் 18 நிறுவனம் பெங்களூரில் உள்ள பனஸ்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், பெங்களூரில் உள்ள ஓரியண்ட் மாலில் இருந்து லால் சிங் தத்தா படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்கள் . அந்த நபர்களிடம் நடத்திய விசாரணைக்கு பிறகு திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்ற செய்வதற்காக அவர்கள் ஒரு குழு அமைத்திருப்பதையும் அறிந்து கொண்ட போலீசார், மீதமுள்ள நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.