ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் 'பாகுபலி' கட்டப்பா பாணியில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி'க்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது வைப்பார் கட்டப்பா. அது போலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்” என அப்பதிவில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தெலுங்கில் முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற 'மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.