புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இரண்டு வருடங்களுக்கு முன்பு கவுதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
தமிழில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் காஜல் அகர்வால் விரைவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. இந்நிலையில் 'பாகுபலி' கட்டப்பா பாணியில் ராஜமவுலிக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
'பாகுபலி'க்கு தான் அடிமை என்பதைக் குறிக்கும் வகையில் அவரது காலை எடுத்து தன் தலையின் மீது வைப்பார் கட்டப்பா. அது போலவே தனது குழந்தையின் காலை தன் தலை மீது வைத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, “ராஜமவுலி சார், இது உங்களுக்காக நீல் மற்றும் என்னுடைய அர்ப்பணிப்பு. நாங்கள் எப்படி முடியாது என்று சொல்ல முடியும்” என அப்பதிவில் 'பாகுபலி' படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா டகுபட்டி, ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரை டேக் செய்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்து தெலுங்கில் முதன் முதலில் அதிக வசூலைப் பெற்ற 'மகதீரா' படத்தில் காஜல் அகர்வால் தான் கதாநாயகி என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.