சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா தற்போது தமிழில் விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியிலும் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ராஷ்மிகா இரண்டாம் கதாநாயகியாக நடித்த 'சீதா ராமம்' படம் கடந்த வாரம் வெளிவந்தது. இரண்டாம் கதாநாயகி என்றாலும் படத்தின் திரைக்கதையை நகர்த்தும் முக்கிய கதாபாத்திரம் அது.
ராஷ்மிகா நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த முதல் வெற்றிப் படம் இது. அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'ஆடவல்லு மீக்கு ஜோஹார்லு' படம் தோல்விப் படமாக அமைந்தது. எனவே, 'சீதா ராமம்' வெற்றியில் ராஷ்மிகாவும் மகிழ்ச்சியில் உள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் வெற்றி குறித்து பேசுகையில், “சீதா ராமம் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படக்குழு மிகவும் கடுமையாக உழைத்தார்கள். அனைவருமே இப்படம் வெற்றி பெறும் என்று நம்பினார்கள்,” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக உள்ளார் என்ற கேள்விக்கு, “ஒரு சரித்திரப் படத்தில் நடிக்க வேண்டும் என்றும், விளையாட்டை மையமாகக் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்றும், ஒரு பயோபிக் படத்தில் நடிக்க வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
அம்மாதிரியான கதைகள் வைத்துள்ளவர்கள் ராஷ்மிகாவை அணுகினால் அவரது கால்ஷீட் நிச்சயம் கிடைக்கும். அதே சமயம் அவரது சம்பளம் 4 கோடி என்பதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.