லோகா படம் நேரடியாக தெலுங்கில் உருவாகி இருந்தால் வெற்றி பெற்றிருக்காது : தயாரிப்பளர் நாகவம்சி | 'ஆர்யன்' படத்தில் அமீர்கான் நடிக்காதது ஏன்? விஷ்ணுவிஷால் சொன்ன புது தகவல் | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'முத்து, குருதிப்புனல்' | தீபிகா படுகோனே கூட 'டான்ஸ்' ஆடவும் ரெடி: சரத்குமார் | இந்த வாரம்... ரிலீஸ் இல்லாத வாரம் ? | ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் |
சென்னை: சென்னையில் கவர்னர் ரவியை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இருவரும் அரசியல் குறித்து விவாதித்ததாக கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றிருந்தார். பின்னர் நேற்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் இன்று(ஆக.,8) தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் சந்தித்தார். சந்திப்பிற்கு செய்தியாளர்களிடம் ரஜினி கூறியதாவது:
மரியாதை நிமித்தமான சந்திப்பு. அவருடன் 25 முதல் 30 நிமிடம் வரை பேசினேன். காஷ்மீரில் பிறந்து வட இந்தியாவிலேயே இருந்தவர் கவர்னர். அவர் தமிழகத்தை மிகவும் நேசித்துள்ளார். முக்கியமாக தமிழ் மக்கள், அவர்களின் நேர்மை, கடின உழைப்பு ஆகியவை கவர்னருக்கு மிகவும் பிடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருக்கின்ற ஆன்மிக உணர்வு அவரை ரொம்பவே ஈர்த்துள்ளது. தமிழகத்தின் நல்லதுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் என்றார். அரசியல் பற்றியும் கவர்னருடன் விவாதித்தேன், அது பற்றி இப்போது பகிர முடியாது. மீண்டும் அரசியல் வரும் திட்டமில்லை. ஜெயிலர் படப்பிடிப்பு 15ம் தேதி அல்லது 22ம் தேதி துவங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பார்லிமென்ட் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு 'அது பற்றியெல்லாம் உங்களிடம் பேச முடியாது. நன்றி' என்றார். அதேபோல், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி உயர்வு குறித்து கேட்டதற்கு சற்று யோசித்து பதில் ஏதும் சொல்லாமல் பின்னர் 'கருத்து கூற விரும்பவில்லை' என்றார்.