தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், அதன் பிறகு மதராசபட்டினம், மான் கராத்தே, வேலாயுதம், அண்ணாத்த, ரெமோ என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சதீஷ் நடித்துக் கொண்டிருக்கும் போது, சுராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்க தயாரானார் வடிவேலு. அப்போது நாய் சேகர் என்பது வடிவேலு காமெடியனாக நடித்த கேரக்டர் பெயர் என்பதால் நாய் சேகர் என்ற டைட்டிலை விட்டுத்தருமாறு சதீஷ் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வைப்பதுதான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அதை விட்டுக் கொடுக்க சதீஷ் பட குழு மறுத்துவிட்டது.
அதையடுத்து திரைக்கு வந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஹீரோ என்பதற்கான விருதினை ஒரு தனியார் நிறுவனம் சதீஷ்க்கு வழங்கி இருக்கிறது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளியிடு இருக்கிறார். கூடவே அந்த புகைப்படத்தில் அவரது மகளும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த விருது தனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாய் சேகர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சதீஷ்.