அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
ஜெர்ரி என்ற படத்தில் அறிமுகமான காமெடி நடிகர் சதீஷ், அதன் பிறகு மதராசபட்டினம், மான் கராத்தே, வேலாயுதம், அண்ணாத்த, ரெமோ என பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் நாய் சேகர் என்ற படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தில் சதீஷ் நடித்துக் கொண்டிருக்கும் போது, சுராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுக்க தயாரானார் வடிவேலு. அப்போது நாய் சேகர் என்பது வடிவேலு காமெடியனாக நடித்த கேரக்டர் பெயர் என்பதால் நாய் சேகர் என்ற டைட்டிலை விட்டுத்தருமாறு சதீஷ் படக்குழுவிடம் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இப்படத்திற்கு நாய் சேகர் என்ற டைட்டில் வைப்பதுதான் கதைப்படி பொருத்தமாக இருக்கும் என்று சொல்லி அதை விட்டுக் கொடுக்க சதீஷ் பட குழு மறுத்துவிட்டது.
அதையடுத்து திரைக்கு வந்த நாய் சேகர் படம் ரசிகர்களின் ஆதரவு பெற்று ஓரளவு வெற்றி பெற்றது. இந்த நிலையில் நாய் சேகர் படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக ஹீரோ என்பதற்கான விருதினை ஒரு தனியார் நிறுவனம் சதீஷ்க்கு வழங்கி இருக்கிறது. அந்த விருதுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர்கள் வெளியிடு இருக்கிறார். கூடவே அந்த புகைப்படத்தில் அவரது மகளும் இடம் பெற்றுள்ளார். மேலும் இந்த விருது தனக்கு கிடைப்பதற்கு காரணமாக இருந்த நாய் சேகர் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் சதீஷ்.