பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

நடிகை குஷ்பூ தன்னுடன் திரையுலகில் ஒரே காலகட்டத்தில் பயணித்தவர்களை சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை. அந்த வகையில் சமீபத்தில் தனது மகள்களை அழைத்துக்கொண்டு நடிகை ரம்பாவின் வீட்டிற்கு சென்று பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார். இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை சந்தித்துள்ளார் குஷ்பூ.
இது குறித்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ள குஷ்பூ, “என்னுடைய ஹீரோவை சந்தித்தது கனவு நனவானது போல இருந்தது. அந்த அளவிற்கு தனது எளிமையான, பண்பான செயல்களால் என்னை ஸ்தம்பிக்க வைத்தார் அஜய் தேவ்கன். இந்த மனிதரிடத்தில் எதுவும் பொய் இல்லை. உண்மையிலேயே இது எனக்கு ரசிகையாக மாறிய தருணம் தான்.. எனக்காக நேரம் ஒதுக்கி உங்கள் அன்பை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றி அஜய் தேவ்கன்.. மீண்டும் உங்களை சந்திக்க விரும்புகிறேன்: என்று கூறியுள்ளார்.