மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
கொரோனா தாக்கம் துவங்கிய கடந்த இரண்டு ஆண்டுகளின்போது தமிழகத்தில் கூட ஓரளவு படப்படிப்புகள், தியேட்டர் வெளியீடுகள் என நிலைமை சமாளிக்கத்தக்கதாக இருந்தது. ஆனால் கேரளாவில் லாக்டவுன் நிபந்தனைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டதால் தமிழகம், ஆந்திராவில் பட வெளியீடுகள் துவங்கிய பின்னரும் கூட அதற்கடுத்த சில மாதங்கள் வரை கேரளாவில் தியேட்டர்கள் இயங்கத் துவங்கவில்லை. அதன் பின்னர் கடந்த சில மாதங்களாகத்தான் நிலைமை சீராகி உள்ளது..
அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியான கடுவா திரைப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது. கிட்டத்தட்ட படம் வெளியாகி 25 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த படம் 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
இன்னும் பல தியேட்டர்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல சமீபத்தில் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பாப்பன் திரைப்படமும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் கூட்டத்தை வரவழைத்துள்ளது. அந்தவகையில் மலையாள திரை உலகம் தற்போது மீண்டும் பார்முக்கு திரும்பி உள்ளது என்று சொல்லலாம்.