'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி உள்ள விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்ற முத்தையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :
பண்பாடு மாறாமல் மண் சார்ந்த மரபுகளம் மாறாத படம் இது. குடும்ப உறவுகளை எடுத்துரைக்க கூடிய திரைப்படமாக விருமன் திரைப்படம் அமையும். இதுவரை ஆடியோ ரிலீஸ் வைக்காத நிலையில் இந்த படத்திற்கு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை மதுரையில் வைத்துள்ளேன். நான் பிறந்த மதுரை மண்ணில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்திருப்பது பெருமையாக உள்ளது. நான் சினிமாவில் ரசித்தவர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். நான் இது போன்ற மண்சார்ந்த கதைக்களத்தை கடந்து திரைப்படம் ஆசைப்படுகிறேன். இயக்குனராக எனக்கே என்னுடைய படங்கள் போட்டியாக உள்ளது. என்னுடைய திரைப்படம் எந்த பின்புலமும் இன்றி எடுக்கப்படுகிறது. சிலர் பின்புலம் இருப்பதாக தவறுதலாக புரிந்து கொண்டுள்ளனர். மொழி போன்ற படங்களை எடுக்க எனக்கும் ஆசை தான். ஆனால் என்னிடம் வரும் ஹீரோக்கள் மண்சார்ந்த படங்களை இயக்குவதற்கே விரும்புகின்றனர்.