‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தமிழ் சினிமாவில் தரமான சில படங்களைக் கொடுத்த இயக்குனராக முன்னணியில் இருந்தவர் ஏஆர் முருகதாஸ். ரஜினிகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய 'தர்பார்' படம் எதிர்பாராத விதமாக தோல்வியடைந்தது. அதற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அந்தப் படமும் டிராப் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்ற தகவல் வெளியானது.
இருந்தாலும் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் தீவிர முயற்சியில் அவர் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் சொன்ன கதை ஒன்றைக் கேட்ட சிம்பு நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளதாம். சிம்பு தற்போது 'பத்து தல' படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முருகதாஸ் இயக்கும் படம் ஆரம்பமாகலாம் என்கிறார்கள்.
ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக சில படங்கள் ஆரம்ப கட்ட நிலையில் வந்து பின்னர் டிராப் ஆகியுள்ளன. எனவே, இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நடக்கும் வரையில் எதுவும் உறுதி இல்லை.