சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
தமிழிலும் இந்தியிலும் முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கிவிட்ட இயக்குனர் ஷங்கர் தற்போது முதல்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து, இளம் முன்னணி நடிகரான ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.
அந்தவகையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள சரூர் நகர் பகுதியில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த பகுதியின் நகராட்சி அதிகாரியான அகுலா ஸ்ரீவாணி என்பவர் பள்ளிக்கூடத்தில் படப்பிடிப்பை நடத்துவதற்கு தடை விதித்ததுடன் பள்ளிக்கூடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மாணவர்களின் படிப்பு பாழாகும் விதமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். அது மட்டுமல்ல இப்படி பள்ளியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தந்த மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாம்.