ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

சமீபகாலமாக தன்னைக் கவர்ந்த படங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த படங்கள் குறித்த பாசிட்டிவான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் பார்த்திபன் இயக்கி, நடித்து தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
அவர் கூறுகையில், இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் படமாக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து பட குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இப்படி பார்த்திபனுக்கு ரஜினி எழுதிய கடிதம் அவர்கள் இருவரும் அடங்கிய ஒரு புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.




