அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ |

சமீபகாலமாக தன்னைக் கவர்ந்த படங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த படங்கள் குறித்த பாசிட்டிவான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் பார்த்திபன் இயக்கி, நடித்து தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
அவர் கூறுகையில், இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் படமாக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து பட குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இப்படி பார்த்திபனுக்கு ரஜினி எழுதிய கடிதம் அவர்கள் இருவரும் அடங்கிய ஒரு புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.