அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

சமீபகாலமாக தன்னைக் கவர்ந்த படங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த படங்கள் குறித்த பாசிட்டிவான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த வகையில் பார்த்திபன் இயக்கி, நடித்து தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இரவின் நிழல் படம் குறித்தும் ஒரு கருத்து வெளியிட்டிருக்கிறார் ரஜினி.
அவர் கூறுகையில், இரவின் நிழல் திரைப்படத்தை அசாத்திய முயற்சியுடன் ஒரே ஷாட்டில் படமாக்கி அனைவரது பாராட்டுகளையும் பெற்று உலக சாதனை படைத்திருக்கும் நண்பர் பார்த்திபன் அவர்களுக்கும், அவரது அனைத்து பட குழுவினருக்கும், மதிப்பிற்குரிய ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும், முக்கியமாக படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த். இப்படி பார்த்திபனுக்கு ரஜினி எழுதிய கடிதம் அவர்கள் இருவரும் அடங்கிய ஒரு புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டு வருகிறது.