சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

அமரர் கல்கி எழுதிய புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் நாவலுக்கு 30 வருட பெரும் முயற்சிக்கு பிறகு திரை வடிவம் கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். சோழர்கால வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கதை அமரர் கல்கி எழுதியது என்றாலும் சோழர்களின் வரலாற்றை மணிரத்னம் ஆய்வு செய்து இந்த படத்தின் கதாபாத்திரங்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்.
அதே சமயம் இந்த படத்தில் விக்ரமின் கதாபாத்திரம் நெற்றியில் நாமம் அணிந்திருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. தற்போது வழக்கறிஞர் செல்வம் என்பவர் இது குறித்து மணிரத்தினம் மீதும் விக்ரம் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், சோழர்கள் நெற்றியில் நாமம் அணிவதில்லை என்றும் அவர்களது கதாபாத்திரத்தை இதில் தவறாக சித்தரித்துள்ளார்கள் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள அவர் இந்த படத்தை தனக்கு பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்ட வேண்டும் என்றும் அதில் வேறு ஏதேனும் காட்சிகள் இதுபோன்ற இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே இந்த படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம் விக்ரம் நடித்துள்ள கரிகாலன் கதாபாத்திரம் ஒரு மாவீரன் மற்றும் இளவரசன் கதாபாத்திரம். அவர் போருக்கு கிளம்பும்போது வெற்றி திலகமாக குங்குமம் தரித்து செல்வது போன்று தான் அவரது புகைப்படம் இருக்கிறது. இதில் ஏன் குறை கண்டுபிடிக்கிறார்கள் என்று பொன்னியின் செல்வன் நாவலின் தீவிர வாசகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.