விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரைக்கு வந்துள்ள படம் இரவின் நிழல். இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற வந்த பிரிகிடாவை படத்தின் ஹீரோயின் ஆக்கினார் பார்த்திபன். இவர் ஏற்கனவே ஆஹா கல்யாணம் என்ற வெப் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமானவர். மேலும் கடந்த வாரத்தில் வெளியான இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிரிகடாவின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் புரமொஷனில் ஈடுபட்டிருந்த போது இரவின் நிழல் படத்தை பற்றி கூறியவர், உதாரணத்துக்காக ஒரு சேரி பகுதிக்கு சென்றால் அங்கு கெட்டவார்த்தை மட்டும் தான் கேட்க முடியும். சினிமாவுக்காக யாரும் ஏமாற்ற முடியாது என்று கூறியிருந்தார் பிரிகிடா. இப்படி சேரி பகுதிக்கு சென்றால் கெட்டவார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என்று அவர் சொன்ன விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார் பிரிகிடா. அந்த வார்த்தைகளை சொன்னதற்கு மனமார வருந்துகிறேன். இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது மொழியும் மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்தேன். நான் ஒரு தவறான உதாரணத்தை எடுத்துக் கொண்டேன். அதைச் சொன்னதற்காக நான் மிகவும் மோசமாக உணர்கிறேன். மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரிகிடா.
அவரைத்தொடர்ந்து, தற்போது பார்த்திபனும் பிரிகிடா சார்பாக மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989ல் நடக்கும் கதை இது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம் கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். பெரும்பாலும் என் படங்கள் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே'' என்று தெரிவித்து இருக்கிறார்.