‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
ஆஹா கல்யாணம் என்கிற வெப்தொடரில் பவி டீச்சராக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிரிகிடா. சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாக இருந்தது. அதனால் இரவின் நிழல் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்ற சென்ற பிரிகிடாவை அந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து விட்டார் பார்த்நதிபன். அதோடு படத்தில் நிர்வாணமாகவும் நடித்திருக்கிறார் பிரிகிடா.
இது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: துணை இயக்குனராக சென்ற என்னை பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடிக்கச் சொல்லிவிட்டார். முதலில் தயங்கினேன் பிறகு கதையும், அதற்கான முயற்சியும் என்னை சம்மதிக்க வைத்தது. கதைக்கு ஒரு நிர்வாண காட்சி தேவை அதை உன்னை போன்ற சினிமாவை நேசிக்கத் தெரிந்த ஒருவரால் தான் நடிக்க முடியும் என்றார். ஆனால் இதை எப்படி பெற்றோரிடம் சொல்லி புரிய வைப்பது என்பது எனக்கு சற்று நெருடலாக இருந்தது.
இருவருமே எனது பெற்றோரிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் சம்மத்தின் பேரில் நடித்தேன். அப்படி நடிப்பதற்கு பல டெக்னிக்கல் விஷயங்கள் இருந்தன என்றாலும் கதைப்படி அது நிர்வாண காட்சி தான். படத்தில் பார்க்கும் போது அது கவர்ச்சியாக தெரியாது, அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்கிறார் பிரிகிடா.