டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக இரண்டு சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும். ஆனால் விஜய் வாங்கிய காருக்கு 40% கணக்கிட்டு இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த அபராதத்தை ரத்து செய்ய கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேஷ் குமார் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து நடந்து வந்த விஜய்யின் வெளிநாட்டு கார் மீதான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.