வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? | பிஎம்டபுள்யூ கார் கொடுத்தார் ஜீவா : முத்தம் கொடுத்தார் ஆர்.பி.சவுத்ரி | சிவகார்த்திகேயன் புதிய படத்தின் இயக்குனர் இவரா? | 29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் |

நடிகர் விஜய் கடந்த 2005ம் ஆண்டு 63 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்தார். அதற்கு நுழைவு வரி செலுத்த வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் கார் இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து அபராதமாக இரண்டு சதவீதம் மட்டுமே கணக்கிட வேண்டும். ஆனால் விஜய் வாங்கிய காருக்கு 40% கணக்கிட்டு இருப்பதாக அவர் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அந்த அபராதத்தை ரத்து செய்ய கோரி விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேஷ் குமார் ஒரு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில், நடிகர் விஜய் இறக்குமதி செய்த காருக்கு 2019 ஜனவரிக்கு முன்னர் முழு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராதம் விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னரும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் அபராதம் விதிக்கலாம் எனவும் வணிக வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் தொடர்ந்து நடந்து வந்த விஜய்யின் வெளிநாட்டு கார் மீதான வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.