ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள கடுவா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி இடம் பெற்ற வசனங்கள் குறித்து மன்னிப்பு கேட்ட பிரித்விராஜ் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் அதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் நடிகர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்குவது குறித்து சமீபகாலமாக மலையாள திரை உலகில் பேசப்பட்டு வரும் விஷயம் பற்றி பிரித்விராஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரித்விராஜ், தனக்கும் ஆண் - பெண் வித்தியாசம் இல்லாமல் ஊதியம் வழங்குவதில் உடன்பாடுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறினார். நான் மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தபோது தன்னைவிட படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராய் அதிக சம்பளம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரித்விராஜ், இந்த விஷயத்தில் நடிகர்களுக்கான ஊதியம் அவர்களது ஸ்டார் வேல்யூவை கணக்கில் கொண்டு தான் வழங்கப்படுகிறதே தவிர, அவர்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு காரணமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.