ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ், பிஜூமேனன் இணைந்து நடித்த அய்யப்பனும் கோஷியும் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணா நடிக்க பீம்லா நாயக் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் இந்த படத்தை ஹிந்தியில் வெளியிடக் கூடாது என தடை கேட்டு டில்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம்.
காரணம் தெலுங்கில் இந்த படத்தில் ரீமேக் ரைட்ஸ் விற்பதற்கு முன்பாகவே இதை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை முதல் ஆளாக வாங்கியவர் தான் ஜான் ஆபிரகாம். தனது சில படங்களை முடித்துவிட்டு இந்த படத்தை ரீமேக் செய்து நடிக்கலாம் என திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது பீம்லா நாயக் ஹிந்தியில் வெளியானால் அவரால் நேரடியாக அய்யப்பனும் கோஷியும் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான் ஆப்ரஹாம்.
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பீம்லா நாயக் படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிட தடை ஏதும் இல்லை என தீர்ப்பளித்துள்ளது.. இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் ஆபிரகாம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.