ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தாலும் அது விக்ரம், பீஸ்ட் மாதிரியான பெரிய படங்களாகத்தான் இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி தியேட்டருக்கு வாராத சூழ்நிலை உள்ளது.
இதனை தயாரிப்பார் சி.வி.குமார் தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்திருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது: விக்ரம் படத்திற்கு பிறகு ஜூலை 1ம் தேதி வரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் எதுவும், அதன் அச்சு மற்றும் விளம்பர செலவுகளை கூட வசூலிக்கவில்லை என்று தெரிகிறது. திரையரங்குகளில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு ஓடிடி தளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதே காரணம். என்று பதிவிட்டுள்ளார்.
சி.வி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், மாயவன், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியவர்.