டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கொரோனா காலத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. மக்கள் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தாலும் அது விக்ரம், பீஸ்ட் மாதிரியான பெரிய படங்களாகத்தான் இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்கள் மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கருதி தியேட்டருக்கு வாராத சூழ்நிலை உள்ளது.
இதனை தயாரிப்பார் சி.வி.குமார் தனது முகநூல் பக்கத்தில் எச்சரித்திருக்கிறார். அவர் எழுதியிருப்பதாவது: விக்ரம் படத்திற்கு பிறகு ஜூலை 1ம் தேதி வரை திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் எதுவும், அதன் அச்சு மற்றும் விளம்பர செலவுகளை கூட வசூலிக்கவில்லை என்று தெரிகிறது. திரையரங்குகளில் சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு ஓடிடி தளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளதே காரணம். என்று பதிவிட்டுள்ளார்.
சி.வி.குமார் அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், மாயவன், கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படங்களை இயக்கியவர்.