ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் வெற்றி படமாக அமையவில்லை.
அதன்பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு 'நாதிரு தின்னா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் ராதிகா ப்ரீத்தி சின்னத்திரையை தேர்ந்தெடுத்தார். ராதிகாவின் அழகிய தோற்றம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. இன்றைய நாளில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகைகளில் ராதிகா ப்ரீத்தியும் ஒருவர்.
சமீபத்தில் பூவே உனக்காக தொடரை விட்டு விலகிய ராதிகா ப்ரீத்தி சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், தமிழில் அவர் நடித்திருந்த 'நாதிரு தின்னா' திரைப்படம் வெளியாவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தது. படம் ரிலீஸான பிறகு சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ள 'நாதிரு தின்னா' திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.