குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா |
சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை இணைக்கப் போகிறது. இதில் இந்திய சினிமாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது சூர்யாவையும் ஆஸ்கர் நிர்வாக குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.