'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் டீசர் வெளியானது! | 'டிஜே டில்லு 2' படத்தின் ரிலீஸ் தேதி இதோ! | திமுக ஸ்டிக்கர் ஒட்ட பார்க்கும் உதயநிதி: நடிகை கஸ்தூரி கடும் விமர்சனம் | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரபாஸ்! | குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்! | இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற அண்ணாமலை! | சுனைனாவின் ரெஜினா டிரைலர் வெளியானது! | தியேட்டர்களில் அனுமனுக்கு ஒரு 'சீட்' ஒதுக்கீடு: ஆதிபுருஷ் படக்குழு அறிவிப்பு | இந்தியன்-2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா?: ரகசியம் காக்கும் படக்குழு | அஜித்துக்கு வில்லனாகும் அர்ஜூன் தாஸ்? |
சினிமாவில் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருது விழா நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வழங்குவதற்காக ஆஸ்கர் குழு புதிதாக 397 உறுப்பினர்களை இணைக்கப் போகிறது. இதில் இந்திய சினிமாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் ஹிந்தி நடிகை கஜோல் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து 4 ஆயிரம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஏற்கனவே இந்த குழுவில் உறுப்பினராக இருக்கும் நிலையில் தற்போது சூர்யாவையும் ஆஸ்கர் நிர்வாக குழு தேர்வு செய்திருக்கிறது. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். இது குறித்த தகவல் வெளியானதை அடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.