சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நேரத்தில் மீனாவின் கணவர் மறைவு குறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய வேதனையைக் கொடுத்தது. நுரையீரல் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். வாழ்க்கை மிகவும் குரூரமானது என்பதை இந்த இறப்பின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது. மீனாவையும் அவரது மகள் நைனிகாவையும் நினைத்து என் மனசு வலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, இன்னொரு பதிவில் இந்த விஷயத்தில் ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். மீனாவின் கணவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக அவர் இறந்துள்ளார். அதனால் தயவு செய்து அவர் கொரோனாவால் இருந்ததாக யாரும் தவறான தகவலை வெளியிட்டு மக்களை அச்சுறுத்த வேண்டாம். அதோடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அவசியம் தான் இருப்பினும் தயவு செய்து மக்களை பயமுறுத்தும் வகையில் செய்திகள் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் குஷ்பு.




