'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' |
தமிழின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து தற்போது இடைவெளி விட்டுள்ளார்கள். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தை முடித்த பிறகு சூர்யா, இயக்குனர் சிவா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். அந்தப் படத்தின் பணிகளை முழுவதுமாக முடித்து படத்தை வெளியிட்ட பின்தான் 'வாடி வாசல்' வேலைகளை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
அதற்குள்ளாக சூர்யா, சிவா படம் நடந்து முடிந்துவிடுமாம். இந்தப் படத்தை முழு நீள கமர்ஷியல் ஆக்ஷன் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இந்தக் கூட்டணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை ஆரம்பிக்கவேயில்லை. இப்போது தயாரிப்பாளர் மாறுவாரா அல்லது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே மீண்டும் தயாரிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.