தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? | ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ் | 10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல் |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‛புஷ்பா' படம் வெற்றி பெற்றது. இதில் ஸ்ரீவள்ளி என்ற வேடத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.
இதனிடையே ‛புஷ்பா 2'வில் ராஷ்மிகா இல்லை என்றும் அவர் கொல்லப்பட்டு விடுவார் என்பது போன்று கதை உள்ளதாக செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள இந்தபட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ‛‛இன்னும் கதையே முழுதாக ரெடியாகவில்லை. அதற்குள் இஷ்டத்திற்கு ஆளாளுக்கு ஒரு கதையை பரப்பி விடுகின்றனர். இவை அனைத்துமே தவறானவை. நிச்சயம் ராஷ்மிகா புஷ்பா 2விலும் தொடருவார்'' என்றார்.




