டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' | பிளாஷ்பேக் : ரீமேக்கிலும் வெற்றி பெற்ற 'மார்க்கண்டேயா' |

தெகிடி, அவன் இவன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றார். தற்போது வேழம் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் இந்தவாரம் ஜூன் 24ல் வெளியாகிறது. ஜனனி தனக்கு பெயருக்கு பின்னால் இருந்த ஐயர் என்பதை முன்பே நீக்கிவிட்டு ஜனனி என்று மட்டும் வைத்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து பலரும் அவரை ஜனனி ஐயர் என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் வேழம் பட பிரஸ்மீட்டில் பேசிய ஜனனி, ‛‛தயவு செய்து இனி என்னை யாரும் ஜனனி ஐயர் என குறிப்பிடாதீர்கள், ஜனனி என்று மட்டுமே கூறுங்கள்'' என்றார். ஜனனியின் இந்த பேச்சை பலரும் வரவேற்றுள்ளனர்.




