லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

பிரபல பின்னணி பாடகி சின்மயி. கடந்த 2014ல் நடிகரும், இயக்குனருமான ராகுல் ரவீந்திரனை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு எட்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது ஆண், பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு த்ரிப்தா, ஷர்வாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக கூறி குழந்தையின் விரலை பிடித்தபடி இருக்கும் போட்டோவை பகிர்ந்து இருந்தார் சின்மயி. இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து கூறினர்.
ஒரு சிலர், வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறந்ததா என கேள்வி எழுப்பினர். இதற்கு, ‛‛நான் கர்ப்பமாக இருந்த போட்டோவை வெளியிடாததால் இப்படி கேள்வி எழுப்பினர். என்னிடம் கேட்கும் இந்த நபர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன். என் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எனது குடும்பம், நண்பர்களால் நான் என்று பாதுகாக்கப்படுவேன். ஆபரேஷன் சமயத்தில் குழந்தைகள் இந்த உலகில் வந்தபோது பஜனை பாடினேன்'' என தெரிவித்துள்ளார் சின்மயி.