இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் சரண்ராஜ். நாயகன், குணசித்திரம், வில்லன் என எல்லாவிதமான கேரக்டரிலும் நடித்தார். சில காலம் நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தவர் தற்போது குப்பன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அவர் மகன் தேவ் சரண்ராஜ் நாயகனாக நடிக்கிறார். நாயகியின் தந்தையாக சரண்ராஜ் நடிக்கிறார்.
இன்னொரு நாயகனாக ஆதி தேவ் அறிமுகமாகிறார். இவர்களுடன் சுஷ்மிதா சுரேஷ், பிரியதர்ஷினி அருணாசலம் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். ஜனார்த்தனன் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஜி.இளய் இசை அமைக்கிறார். ஒரு குப்பத்து மீனவ இளைஞனுக்கும் மார்வாடி பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை பாலவாக்கத்தில் ஆரம்பமாகி விசாகப்பட்டினம், ஐதராபாத் போன்ற இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது.
படம் பற்றி சரண்ராஜ் கூறியதாவது: 35 வருஷமா பாலவாக்கத்தில இருக்கேன். தினமும் நாயை கூட்டிட்டு கடற்கரை வழியா வாக்கிங் போவதுண்டு. அப்போ பல பேர் பழக்கமாகி அங்கு அரட்டை அடிச்சிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்படிதான் குப்பன் என்ற மீனவரின் நட்பு கிடைத்தது. அப்போ தான் தோணிச்சு.. அவர் கதையை நாம ஏன் எழுத கூடாதுன்னு. கதை எழுதி முடிச்சதும் அவரது பெயரையே தலைப்பாக வெச்சுட்டேன். அவரும் இதில் சின்ன கேரக்டரில் நடித்துள்ளார். என்றார்.