தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகர் சூரி ஒரு பக்கம் நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என தற்போது பழையபடி பிசியான திரையுலக வாழ்க்கைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வெளியான சூரியின் புகைப்படமும் அதன் கீழே குறிப்பிடப்பட்டிருந்த செய்தியும் சூரியை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதாவது மதுரையில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் சூரி நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக மேல்படிப்பு படிக்க விரும்பும் அனைவருக்கும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் சூரியின் படமும் இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ந்து போன சூரி, “இப்படி என் பெயரில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒரு ஏமாற்று வேலை.. இந்த புகைப்படம் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதை வைத்து இப்படி போலியான ஒரு விளம்பரத்தை கொடுத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் யாரோ சிலர் செயல்பட்டிருக்கிறார்கள்.. இதுபோன்ற இனி அவர்கள் செயல்படக்கூடாது.. மேலும் இது தொடர்ந்தால் அவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார் சூரி.
மேலும் கல்வி போன்ற விஷயங்களுக்கு என்னுடைய உதவிகள் எப்போதும் சத்தம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. ஆனால் அதை இப்படி வெளிப்படையாக விளம்பரம் போட்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார் சூரி.