22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
நடிகர் சூரி ஒரு பக்கம் நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என தற்போது பழையபடி பிசியான திரையுலக வாழ்க்கைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வெளியான சூரியின் புகைப்படமும் அதன் கீழே குறிப்பிடப்பட்டிருந்த செய்தியும் சூரியை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதாவது மதுரையில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் சூரி நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக மேல்படிப்பு படிக்க விரும்பும் அனைவருக்கும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் சூரியின் படமும் இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ந்து போன சூரி, “இப்படி என் பெயரில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒரு ஏமாற்று வேலை.. இந்த புகைப்படம் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதை வைத்து இப்படி போலியான ஒரு விளம்பரத்தை கொடுத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் யாரோ சிலர் செயல்பட்டிருக்கிறார்கள்.. இதுபோன்ற இனி அவர்கள் செயல்படக்கூடாது.. மேலும் இது தொடர்ந்தால் அவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார் சூரி.
மேலும் கல்வி போன்ற விஷயங்களுக்கு என்னுடைய உதவிகள் எப்போதும் சத்தம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. ஆனால் அதை இப்படி வெளிப்படையாக விளம்பரம் போட்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார் சூரி.