ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவுக்குக் கடந்த வாரம் சென்னையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா சினிமாவில் நடிக்கப் போகிறார். ஆனாலும், அவர் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பெரும்பாலும் தெலுங்கு ஊடகங்கள்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா இன்னும் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதற்குள் எப்படி, இப்படி ஒரு புதிய நிபந்தனை போட்டுள்ளார் என்று எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை என தமிழ்த் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன், தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் தர மாட்டேன் ஆகியவைதான் நயன்தாரா விதித்துள்ள புதிய நிபந்தனைகள் என்கிறார்கள். நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. ஹிந்திப் படங்களில் காதல் காட்சிகள் பொதுவாகவே நெருக்கமாகத்தான் இருக்கும். அப்படியிருக்க திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என நயன்தாரா எப்படி சொல்லியிருப்பார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.