காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவுக்குக் கடந்த வாரம் சென்னையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா சினிமாவில் நடிக்கப் போகிறார். ஆனாலும், அவர் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பெரும்பாலும் தெலுங்கு ஊடகங்கள்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா இன்னும் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதற்குள் எப்படி, இப்படி ஒரு புதிய நிபந்தனை போட்டுள்ளார் என்று எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை என தமிழ்த் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன், தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் தர மாட்டேன் ஆகியவைதான் நயன்தாரா விதித்துள்ள புதிய நிபந்தனைகள் என்கிறார்கள். நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. ஹிந்திப் படங்களில் காதல் காட்சிகள் பொதுவாகவே நெருக்கமாகத்தான் இருக்கும். அப்படியிருக்க திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என நயன்தாரா எப்படி சொல்லியிருப்பார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.