தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். என்றாலும் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். இப்போது அந்த திட்டத்தை மாற்றி அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று இரவு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா, மனைவி உஷா ஆகியோரும் உடன் செல்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்படுவதாகவும், இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்றும் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.