ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். என்றாலும் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். இப்போது அந்த திட்டத்தை மாற்றி அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று இரவு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா, மனைவி உஷா ஆகியோரும் உடன் செல்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்படுவதாகவும், இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்றும் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.